புத்தளத்தில் இடம்பெற்ற இதய நோய் தொடர்பாக தெளிவுபடுத்தும் இலவச செயலமர்வு!

Date:

-எம்.யூ.எம்.சனூன்

இருதய நோய் தொடர்பாக சமூகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் இலவச செயலமர்வொன்று நேற்று (20)  புத்தளம் மஸ்ஜித் வீதியில் அமைந்துள்ள இஸ்மாயில் தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்றது.

இஸ்மாயில் தனியார் வைத்தியசாலையின் பணிப்பாளர் உடற்கூற்று விஷேட வைத்திய நிபுணர் டாக்டர் எம்.ஐ.எம்.ரிபாத் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதான வளவாளராக இருதய சத்திர சிகிச்சை விஷேட வைத்திய நிபுணர் டாக்டர் எம்.ஏ.நௌஷாத் கலந்து கொண்டார்.

“மூட நம்பிக்கைகளை தவிர்த்து அறிவியலோடு பயணிப்போம்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் இருதய நோய் தொடர்பான விளங்கங்கள், வருமுன் காப்போம் செயற்திட்டங்கள், உணவு பழக்க வழக்கங்கள் தொடர்பாகவும் இங்கு தெளிவு படுத்தப்பட்டன.

இந்நிகழ்வில் இளம் வைத்தியர்களான டாக்டர் முஹம்மது முன்சிப், டாக்டர் சஹாரி ரிஸ்வி, டாக்டர் சம்லத் ஹலீம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...