தேசிய பட்டியல் மூலம் தான் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கட்சியின் தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனடிப்படையில், தேசிய பட்டியலில் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்கவை பதவி விலக செய்து, அந்த பதவியை தனக்கு வழங்குமாறு அவர், கட்சியின் தலைவரான சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும் தனது தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை முஜிபுர் ரஹ்மானுக்கு வழங்குவது குறித்து மயந்த திஸாநாயக்க இதுவரை விருப்பத்தை வெளியிடவில்லை ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆங்கில ஊடகமொன்றுன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
மயந்த திஸாநாயக்க, தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை முஜிபுர் ரஹ்மானுக்கு வழங்க தயங்கி வருகிறார்.
மயந்த திஸாநாயக்க தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படும் போது இரண்டு ஆண்டு காலத்திற்கு மாத்திரமே நியமிக்கப்படுவதாக கூறியே நியமிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.