லசந்தவை கொலை செய்தவர்கள் சபையில் இருக்கின்றனரா?: சஜித் கேள்வி

Date:

ஊடகவியலாளர் லசந்த விக்ரமசதுங்க  தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் பயணத்திற்கு பெரும் பலமாக இருந்தவர் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உட்பட அரசாங்கம் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகளை நடத்தாதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தவர்கள் இந்த சபையில் இருக்கின்றாரா? என சஜித் பிரேமதாச மீண்டும் மீண்டும் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

பல்வேறு ஆயுதக்குழுக்களுக்கு தான் அஞ்சவில்லை எனவும் இறக்கவும் தயாராக இருப்பதாகவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி நேற்றிரவு வெளியிட்ட இலங்கையில் நடந்த ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பான ஆவணப்படுத்தலில், லசந்த விக்ரமதுங்கவை, கொழும்பு திரிபோலி இராணுவ முகாமில் இயங்கி வந்த ஆயுதக்குழுவே கொலை செய்ததாக தெரிவித்திருந்தது.

 

 

Popular

More like this
Related

கண்டியில் கோலாகலமாக நடைபெற்ற ‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’ வரலாற்று நூலின் அறிமுக விழா!

இலங்கையின் பெருமைமிக்க வரலாற்றில் முஸ்லிம்களின் பங்களிப்பை எடுத்துரைக்கும் 'அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய...

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...