அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

Date:

சதொச நிறுவனம் ஆறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மீண்டும் குறைத்துள்ளது.

அனைத்து சதொச நிறுவனங்களிலும் இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிவப்பு பருப்பு, பெரிய வெங்காயம், வெள்ளைப்பூண்டு, நெத்தலி, கிழங்கு மற்றும் சோயாமீட் ஆகியவற்றின் விலைகள் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, சிவப்பு பருப்பு கிலோ ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டு 299 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பெரிய வெங்காயம் கிலோ ஒன்றின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு 195 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

வெள்ளைப்பூண்டு கிலோ ஒன்றின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டு 620 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், நெத்தலியின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டு 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும், கிழங்கின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், சோயாமீட்டின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் தெரிவித்த்துள்ளது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...