அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

Date:

சதொச நிறுவனம் ஆறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மீண்டும் குறைத்துள்ளது.

அனைத்து சதொச நிறுவனங்களிலும் இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிவப்பு பருப்பு, பெரிய வெங்காயம், வெள்ளைப்பூண்டு, நெத்தலி, கிழங்கு மற்றும் சோயாமீட் ஆகியவற்றின் விலைகள் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, சிவப்பு பருப்பு கிலோ ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டு 299 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பெரிய வெங்காயம் கிலோ ஒன்றின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு 195 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

வெள்ளைப்பூண்டு கிலோ ஒன்றின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டு 620 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், நெத்தலியின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டு 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும், கிழங்கின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், சோயாமீட்டின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் தெரிவித்த்துள்ளது.

Popular

More like this
Related

காவி உடையை தவறாக பயன்படுத்தியமைக்கு மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு!

புனிதமான காவி உடையைத் தவறாகப் பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட போலியான...

உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஆவணங்கள் திரட்டும் நடவடிக்கை

கண்டி, உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 1939- 2026 வரையான காலப்பகுதியில்...

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை...