இந்தியாவில் பயன்பாட்டிலிருந்து ஒதுக்கிய ரயில் எஞ்ஜின்கள் இலங்கைக்கு!

Date:

சுமார் 20 ரயில் என்ஜின்களை இலங்கைக்கு வழங்க இந்தியா இணங்கியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்சார ரயில்களை இயக்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், ஏற்கனவே பயன்படுத்திய ரயில் என்ஜின்களை இலங்கைக்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த ரயில் எஞ்ஜின்கள் இலங்கைக்கு பொருத்தமானதாக உள்ளதா என்பதைக் கண்டறிய தொழில்நுட்பக் குழுவொன்றை விரைவில் இந்தியாவிற்கு அனுப்பத் தீர்மானித்துள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்தே குறித்த என்ஜின்களை இலங்கைக்கு கொண்டு வருவது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...