‘ ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றும் தேவையில்லை’

Date:

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் சர்வதேச மட்டத்திலான விசாரணை இலங்கைக்கு அவசியமில்லை என சுவிட்சர்லாந்திற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் சட்டத்தரணி சரத் கோன்கஹகே தெரிவித்துள்ளார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு, பரணகம ஆணைக்குழு மற்றும் உடலகம் ஆணைக்குழு என்பன சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ள நிலையில், இந்த தாக்குதல் தொடர்பில் சர்வதேசத்தை நாடவேண்டிய அவசியமில்லை என சட்டத்தரணி சரத் கோன்கஹகே சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானியாவின் சேனல் 4 புலம்பெயர் நாடுகளின் உதவியுடன் இலங்கை மற்றும் இலங்கையர்களை ஆபத்துக்கு உள்ளாக்குவதற்காக இதனைச் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஒவ்வொரு முறையும் சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் நடைபெறும் போது இலங்கை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

அதேபோன்று இம்முறையும் சேனல் 4 அவ்வாறானதொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது என சுவிட்சர்லாந்திற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் சட்டத்தரணி சரத் கோன்கஹகே தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...