ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முழு பொறுப்பையும் மைத்திரி ஏற்க வேண்டும் !

Date:

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான முழுமையான பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஏற்க வேண்டுமென சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இந்தியாவும் புலனாய்வு பிரிவினரும் தகவல்களை வழங்கிய போதிலும் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் எதற்காக விசாரணை நடத்தப்படவில்லை என்ற கேள்வி எழுகின்றது.

அத்துடன், குறித்த சந்தர்ப்பத்தில் தமது பொறுப்புக்களை தமக்கு பதிலாக மற்றுமொருவரிடம் கையளிக்காது நாட்டின் ஜனாதிபதி வெளிநாட்டிற்கு செல்கிறார். இதனடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது பொறுப்புக்களில் இருந்து விலகியுள்ளமை தெளிவாகுவதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே குற்றம்சாட்டியுள்ளார்.

 

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...