காதி நீதிபதிகளுக்கான கொடுப்பனவு அதிகரித்து கொடுக்கப்பட வேண்டும்!

Date:

முஸ்லிம்களுக்கான விவாக விவகாரத்து சட்டம் எமது உரிமையாகும். இது திருத்தப்படுவதாயின் முஸ்லிம்களின் விருப்பத்துக்கு அமைவாகவே செய்யப்படவேண்டும்.

அதற்கமைவாகவே அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா திருத்தியமைக்க வேலையைச் செய்திருந்தாலும் அதனை வேறு சமயத்தவர் தமக்கு வேண்டியபடி மாற்ற முயல்வதை அனுமதிக்க முடியாது என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி நீதி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

விவாக விவகாரத்துச்சட்டம் தொடர்பான அறிக்கையை 27 இஸ்லாமிய சிவில் சமூக அமைப்புக்களின் முன்னிலையில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் கையளிக்கும் போதே அசாத் சாலி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த இறுதி அறிக்கையானது 18 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்துக்கு அமைவாக தயாரிக்கப்பட்டதாகும்.

விவாக, விவாகரத்துச் சட்டமானது திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸைப் பின்பற்றியதாகவே தயாரிக்கப்படவேண்டியதாகும் என பெண் சட்டத்தரணி நுஸ்ரா ஸருக்கும் இங்கு கருத்துத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த டாக்டர் மரீனா தாஹா இஸ்லாம் தோன்றியது முதல் கடந்த 1400 வருடங்களுக்கு மேலாகவும் பெண்காதி நீதிபதிகள் நியமிக்கப்பட்ட வரலாறு கிடையாது இது ஆழ்ந்த ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய விடயமாகும்.

அடுத்து காதிநீதிபதிகளுக்கு ஒரு சிறிய தொகையே வழங்கப்பட்டு வருகிறது.
கொடுப்பனவாக அதனை மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...