காலி பகுதியில் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்கவின் மாமனார் சுட்டுக்கொலை!

Date:

காலி டிக்சன் சந்தியில் மின்வலு மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்கவின் மாமனாரான கோடிஸ்வர வர்த்தகர் லலித் வசந்த மெண்டிஸ் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலியில் உள்ள மிகப் பெரிய ஆடை விற்பனை நிலையத்தின் உரிமையாளரான 60 வயதான லலித் வசந்த மெண்டிஸ் , தனது வர்த்தக நிலையத்தில் இருந்து காரில் வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்குள்ளாகியுள்ளார்.

ரி.56 ரக துப்பாக்கியில் லலித் வசந்த மெண்டிஸ் சுடப்பட்டுள்ளதுடன் அவரது உடலை 15க்கும் மேற்பட்ட தோட்டக்கள் நுழைத்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவரை பின் தொடர்ந்தும் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. லலித் வசந்த மெண்டிஸ் காரின் சாரதி ஆசனத்தில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் உடல் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. காலி பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...