சமையல் எரிவாயு விலை இன்று அதிகரிக்கும் சாத்தியம்?

Date:

சமையல் எரிவாயு விலை இன்று அதிக விகிதத்தால் அதிகரிக்கப்படலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், புதிய விலை தொடர்பில் இன்று முற்பகல் அறிவிக்கப்படுமெனவும் உலக சந்தையில் எரிவாயுவின் விலை சுமார் 105 டொலராக அதிகரித்துள்ளதாக லிட்ரோ எரிவாயுன் நிறுவனத் தலைவர் முஜித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், அண்மைக்காலங்களை விட அதிகமான விலை அதிகரிப்பாக இது அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய இந்த விலை உயர்வு உள்ளூர் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, கடந்த மாதம் 4ஆம் திகதியளவில், 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 204 ரூபாவால் குறைக்கப்பட்டு 2982 ரூபாயாக அறிவிக்கப்பட்டது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...