சீரற்ற காலநிலையால் 14 மாவட்டங்களில் 6,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த இரண்டு நாட்களில் 1,735 குடும்பங்களைச் சேர்ந்த 6,285 நபர்கள் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, காலி, மாத்தறை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 1,209 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பு மாவட்டம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் நாடு முழுவதும் 291 வீடுகளும் சேதமடைந்துள்ளன.