சுதந்திர பலஸ்தீன் தேசத்தை உருவாக்குவதே தீர்வாக முடியும் – சவூதி வெளிநாட்டமைச்சர்

Date:

பலஸ்தீனின் பிரச்சினைக்கு இரு நாட்டுத் தீர்வுக்கான ஆதரவைப் பெறும் வகையில் சவூதி அரேபியாவின் வெளிநாட்டமைச்சர் இளவரசர் பைஸல் பின் பர்ஹான் அல் ஸஊத் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் 30 நாடுகள் கலந்து கொண்டன.

பெரும்பாலும் வெளிநாட்டமைச்சர்கள் கலந்து கொண்ட இந்தச் சந்திப்பு திங்களன்று (18) நியுயோர்க்கில் மூடிய அறையில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் இஸ்ரேல் – பலஸ்தீன் பிரச்சினைக்கு சுதந்திர பலஸ்தீன தேசத்தை உருவாக்குவதே ஒரே தீர்வு என சவூதியின் வெளிநாட்டமைச்சர் தெரிவித்த கருத்தை சவூதியின் அரச தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது.

இருநாட்டுத் தீர்வில் மக்கள் நம்பிக்கையிழந்து வருகின்றனர் எனத் தெரிவித்த அவர் ஆகவே நாங்கள் ஆரம்ப நிலைக்கு மீண்டு சுதந்திர பலஸ்தீனை உருவாக்க வேண்டும் என்றார்.

இந்தச் சந்திப்பினை சவூதிஅரேபியா, ஜோர்தான், எகிப்து, ஐக்கிய அரபு இராஜ்ஜியம் என்பவற்றுடன் ஐரோப்பிய யூனியனும் இணைந்து ஏற்பாடு செய்திருந்ததாகவும் இஸ்ரேல்-பலஸ்தீன் தரப்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை எனவும் இஸ்ரேலின் ஹரட்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சவூதிக்கும் இஸ்ரேலுக்குமிடையில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் பலஸ்தீன் தொடர்பிலான சவூதியின் நிலைப்பாடு முக்கியம் பெறுகிறது.

Popular

More like this
Related

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...