‘செனல் 4 விவகாரம்’: கடந்த 4 வருடங்களில் தன் மீது பல குற்றச்சாட்டுகள்!

Date:

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் உண்மையில் என்ன நடந்தது என்பதை செனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் மூலம் நன்கு புரிந்துக்கொள்ள முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

செனல் 4 மூலம் வெளியிடப்பட்ட ஆவணப்படம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

“ பார்க்கப் போனால் அன்று தெரிவித்ததை விட முற்றிலும் வேறான ஒரு விடயமே நடந்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் நான்கு வருடங்களாக வழங்கக்கூடிய தொல்லைகள் அனைத்தும் வழங்கப்பட்டன. அதற்கான பல தீர்ப்புகளும் வழங்கப்பட்டன.

செனல் 4 தொடர்பிலான கடிதத் தயாரிப்பை நிறைவு செய்ததன் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதிநிதியை நான் சந்திப்பேன்.

ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரையின் படி, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையை நானும் கோருகின்றேன்.” என தெரிவித்தார்.

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...