‘செனல் 4 விவகாரம்’: கடந்த 4 வருடங்களில் தன் மீது பல குற்றச்சாட்டுகள்!

Date:

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் உண்மையில் என்ன நடந்தது என்பதை செனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் மூலம் நன்கு புரிந்துக்கொள்ள முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

செனல் 4 மூலம் வெளியிடப்பட்ட ஆவணப்படம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

“ பார்க்கப் போனால் அன்று தெரிவித்ததை விட முற்றிலும் வேறான ஒரு விடயமே நடந்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் நான்கு வருடங்களாக வழங்கக்கூடிய தொல்லைகள் அனைத்தும் வழங்கப்பட்டன. அதற்கான பல தீர்ப்புகளும் வழங்கப்பட்டன.

செனல் 4 தொடர்பிலான கடிதத் தயாரிப்பை நிறைவு செய்ததன் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதிநிதியை நான் சந்திப்பேன்.

ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரையின் படி, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையை நானும் கோருகின்றேன்.” என தெரிவித்தார்.

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...