ஜனாதிபதிக்கு பேஸ்புக்கில் கொலைமிரட்டல் விடுத்த இளைஞர்: குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது முகப்புத்தகத்தின் மூலம் கொலை மிரட்டல் விடுத்த இளைஞன் ஒருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எப்பாவெல பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் வியாழக்கிழமை  (07) தம்புத்தேகம மற்றும் எப்பாவல பகுதிகளுக்கு ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ளார்.

இதனைமுன்னிட்டு சந்தேகநபர் முகப்புத்தகத்தில் ஜனாதிபதியை கொலை மிரட்டல் விடும் விதத்தில் பதிவிட்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பதிவில் “ஸ்னைப்பர் துப்பாக்கிதாரி ஒருவரைக் கண்டு பிடிக்க முடியுமா? நாட்டை சீரழித்தவர் வருகிறார்” என சந்தேக நபர் பதிவிட்டுள்ளார்.

பதிவு குறித்து உடனடியாக அறிந்து கொண்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் துரிதமாக செயற்பட்டு குறித்த இளைஞனைக் கைது செய்துள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...