ஜனாதிபதிக்கு பேஸ்புக்கில் கொலைமிரட்டல் விடுத்த இளைஞர்: குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது முகப்புத்தகத்தின் மூலம் கொலை மிரட்டல் விடுத்த இளைஞன் ஒருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எப்பாவெல பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் வியாழக்கிழமை  (07) தம்புத்தேகம மற்றும் எப்பாவல பகுதிகளுக்கு ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ளார்.

இதனைமுன்னிட்டு சந்தேகநபர் முகப்புத்தகத்தில் ஜனாதிபதியை கொலை மிரட்டல் விடும் விதத்தில் பதிவிட்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பதிவில் “ஸ்னைப்பர் துப்பாக்கிதாரி ஒருவரைக் கண்டு பிடிக்க முடியுமா? நாட்டை சீரழித்தவர் வருகிறார்” என சந்தேக நபர் பதிவிட்டுள்ளார்.

பதிவு குறித்து உடனடியாக அறிந்து கொண்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் துரிதமாக செயற்பட்டு குறித்த இளைஞனைக் கைது செய்துள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...