ஞானசார தேரர் உள்ளிட்ட எழுவருக்கு எதிரான வழக்கை மீள அழைக்க உத்தரவு

Date:

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 11ஆம் திகதி மீள அழைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டார்.

புனித குர்ஆன் தொடர்பான தவறான மற்றும் போலியான அறிக்கைகளை ஊடகங்களுக்கு வெளியிட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் கிடைக்கவில்லையென பொலிஸாரால் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில், பிணையில் உள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார உள்ளிட்ட பிரதிவாதிகள் குழு இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தது

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...