ஞானசார தேரர் உள்ளிட்ட எழுவருக்கு எதிரான வழக்கை மீள அழைக்க உத்தரவு

Date:

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 11ஆம் திகதி மீள அழைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டார்.

புனித குர்ஆன் தொடர்பான தவறான மற்றும் போலியான அறிக்கைகளை ஊடகங்களுக்கு வெளியிட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் கிடைக்கவில்லையென பொலிஸாரால் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில், பிணையில் உள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார உள்ளிட்ட பிரதிவாதிகள் குழு இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தது

Popular

More like this
Related

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...

நிதியமைச்சு செயலாளரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியத்த மக்கள்

அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை  ஆர்ப்பாட்டம்...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...