டெங்கு நோயால் பங்களாதேஷில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு

Date:

பங்களாதேஷில் டெங்கு காய்ச்சலினால் சுமார் 1000 பேர் உயிரிழந்திருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, இந்நிலைமை மேலும் அதிகரிக்கலாம் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அண்மைய தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் பருவ மழைக் காரணமாக டெங்கு நுளம்புகளை உருவாகக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த நோயைக் கட்டுப்படுத்த அந்நாட்டு வைத்தியர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் போராடி வருகின்றனர்.

இதன் காரணமாக அந்நாட்டு வைத்தியசாலைகள் நிரம்பி வழிவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பங்களாதேஷில் பருவகால நோயாக டெங்கு நோய் காணப்பட்டாலும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பமான மற்றும் ஈரலிப்பான பருவங்கள் காரணமாக இது அடிக்கடி ஏற்படும் நோயாக மாறியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...