துப்பாக்கி வைத்திருப்போருக்கு பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

Date:

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்கும் நடவடிக்கை ஒக்டோபர் முதலாம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 31 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த தினத்தின் பின்னர் 2024 ஆம் ஆண்டிற்காக துப்பாக்கிகளுக்கான அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, 2024 / 2025 வருடங்களுக்கான தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் பதிவுகளைப் புதுப்பிக்கும் நடவடிக்கையும் எதிர்வரும் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த தினத்தின் பின்னர் மேற்கொள்ளப்படும் புதுப்பிப்பு நடவடிக்கைகளுக்கு தாமதக் கட்டணம் அறவிடப்படும் அல்லது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி...

Diamond Excellence Award: அட்டாளைச்சேனை Hakeem Art Work க்கு “கலை. சமூக தாக்கம்” விருது

அட்டாளைச்சேனை-13 இல் செயல்பட்டு வரும் Hakeem Art Work Shop நிறுவனம்,...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத்  தொடர்ந்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேசிய லொத்தர்...

தேசிய இணையவழிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிலையம் ஆரம்பம்!

இணையவழித் தாக்குதல்கள் காரணமாக அரசாங்க நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் எதிர்கொள்ளும்...