நாடு திரும்பினார் ஜனாதிபதி!

Date:

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு திரும்பியுள்ளார்.

துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான இ.கே. 650 விமானம் மூலம் இன்று காலை 8.30 மணியளவில் அவர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

G77 மற்றும் சீன அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கியூபாவின் ஹவானாவுக்கு பயணமானார்.

கியூப விஜயத்தை நிறைவு செய்த பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்த அமர்வில் கலந்துகொள்வதற்காக கடந்த 17 ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகரை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...