தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் சர்வமதத் தலைவர்களுக்கிடையில் விஷேட கலந்துரையாடல்!

Date:

கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள தர்மநிலையத்தின் விஹாராதிபதி கலாநிதி எல்லே குணவன்ச நாயக்க தேரர் தலைமையில் சர்வ மதத் தலைவர்களின் பங்களிப்புடன் விஷேட கலந்துரையாடலொன்று நே‌ற்று (20) நடைபெற்றது.

இக்கலந்துறையாடலில் கலாநிதி எல்லே குணவன்ச நாயக தேரர், சிவ ஸ்ரீபாபு சர்மா குருக்கள், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி, கலாநிதி நிஷான் குரே பாதிரியார் உட்பட பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி சகல மதத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலின் போது இலங்கை நாட்டை கட்டியெழுப்பும் வண்ணம் மதங்களுக்கு இடையே மத நல்லுறவையும் தேசிய ஐக்கியத்தையும் பேணுவதில், சர்வமத அமைப்பினரின் பங்கு முக்கியம் என்பதை பற்றியும், அதன் விரிவான திட்டங்கள் பற்றியும் விஷேடமாக ஆலோசிக்கப்பட்டது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...