தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் சர்வமதத் தலைவர்களுக்கிடையில் விஷேட கலந்துரையாடல்!

Date:

கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள தர்மநிலையத்தின் விஹாராதிபதி கலாநிதி எல்லே குணவன்ச நாயக்க தேரர் தலைமையில் சர்வ மதத் தலைவர்களின் பங்களிப்புடன் விஷேட கலந்துரையாடலொன்று நே‌ற்று (20) நடைபெற்றது.

இக்கலந்துறையாடலில் கலாநிதி எல்லே குணவன்ச நாயக தேரர், சிவ ஸ்ரீபாபு சர்மா குருக்கள், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி, கலாநிதி நிஷான் குரே பாதிரியார் உட்பட பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி சகல மதத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலின் போது இலங்கை நாட்டை கட்டியெழுப்பும் வண்ணம் மதங்களுக்கு இடையே மத நல்லுறவையும் தேசிய ஐக்கியத்தையும் பேணுவதில், சர்வமத அமைப்பினரின் பங்கு முக்கியம் என்பதை பற்றியும், அதன் விரிவான திட்டங்கள் பற்றியும் விஷேடமாக ஆலோசிக்கப்பட்டது.

Popular

More like this
Related

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...

‘இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம்; விளக்கமும் இலங்கையில் அதன் நடைமுறையும்’ நூல் வெளியீடு இன்று மாலை BMICH இல்.

மிஷ்காத் ஆய்வு நிறுவனம் வெளியிடுகின்ற ''இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம்; விளக்கமும் இலங்கையில்...

6 ஆம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டம் 2027 க்கு ஒத்திவைக்கப்பட்டது!

தற்போதைய கல்வி சீர்திருத்த செயல்முறையின் 6 ஆம் வகுப்பு ஆங்கில தொகுதியை...