மத்திய மாகாண பாடசாலை மாணவர்களிடையே கல்வி அறிவு குறைவடைந்துள்ளது!

Date:

மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களில் 3 வீதமானவர்களே சிறந்த கல்வியறிவைக் கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தோற்றுப் பரவிய காலப்பகுதியில் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கையில் ஏற்பட்ட தடைகளே இந்த நிலைமைக்கு காரணம் என மத்திய மாகாண கல்விச் செயலாளர் மேனகா ஹேரத் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாணத்தில் தரம் 4 மற்றும் 5 மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்துவதற்கு திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த திட்டத்திற்கு ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் ஆதரவைப் பெறவுள்ளதாக மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஆரம்பப் பிரிவு மாத்திரமன்றி 6 ஆம் ஆண்டு முதல் 11 ஆம் ஆண்டு வரையான மாணவர்களின் கல்வியறிவை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை அமுலில் உள்ளதாக மத்திய மாகாண கல்விச் செயலாளர் மேனகா ஹேரத் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...