மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களில் 3 வீதமானவர்களே சிறந்த கல்வியறிவைக் கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தோற்றுப் பரவிய காலப்பகுதியில் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கையில் ஏற்பட்ட தடைகளே இந்த நிலைமைக்கு காரணம் என மத்திய மாகாண கல்விச் செயலாளர் மேனகா ஹேரத் தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாணத்தில் தரம் 4 மற்றும் 5 மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்துவதற்கு திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த திட்டத்திற்கு ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் ஆதரவைப் பெறவுள்ளதாக மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஆரம்பப் பிரிவு மாத்திரமன்றி 6 ஆம் ஆண்டு முதல் 11 ஆம் ஆண்டு வரையான மாணவர்களின் கல்வியறிவை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை அமுலில் உள்ளதாக மத்திய மாகாண கல்விச் செயலாளர் மேனகா ஹேரத் தெரிவித்துள்ளார்.