மத்திய மாகாண பாடசாலை மாணவர்களிடையே கல்வி அறிவு குறைவடைந்துள்ளது!

Date:

மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களில் 3 வீதமானவர்களே சிறந்த கல்வியறிவைக் கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தோற்றுப் பரவிய காலப்பகுதியில் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கையில் ஏற்பட்ட தடைகளே இந்த நிலைமைக்கு காரணம் என மத்திய மாகாண கல்விச் செயலாளர் மேனகா ஹேரத் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாணத்தில் தரம் 4 மற்றும் 5 மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்துவதற்கு திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த திட்டத்திற்கு ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் ஆதரவைப் பெறவுள்ளதாக மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஆரம்பப் பிரிவு மாத்திரமன்றி 6 ஆம் ஆண்டு முதல் 11 ஆம் ஆண்டு வரையான மாணவர்களின் கல்வியறிவை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை அமுலில் உள்ளதாக மத்திய மாகாண கல்விச் செயலாளர் மேனகா ஹேரத் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...