மத்திய வங்கியின் நாணய சபையினால் Bimputh Finance நிறுவனத்தின் உரிமம் இரத்து!

Date:

இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையினால் பட்டியலிடப்பட்ட Bimputh Finance நிதி நிறுவனத்தின் உரிமம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

வழங்கப்பட்ட பல பொதுவான அறிவுறுத்தல்கள், விதிகள் தொடர்ச்சியாக மீறப்பட்டதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மூலதன மட்டம் இல்லாமை, தரம் குறைந்த சொத்துகள், தொடர்ச்சியாக பதிவாகியுள்ள இழப்புகள் காரணமாக நிறுவனத்தின் நிதி நிலைமை மேலும் பலவீனமடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், Bimputh Finance-இன் உரிமம் இரத்து செய்யப்படுவதுடன், அவர்கள் நிதி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...