மனித புதைகுழியில் பெண் போராளிகளின் இலக்கத்தகடுகள் கண்டுபிடிப்பு!

Date:

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் மூன்றாம் நாள் அகழ்வு பணிகளின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளிகள் பயன்படுத்தும் சில சான்றுப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் இலக்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பெண் போராளிகளின் ஆடைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படும் இலக்கங்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

மேலும் இன்று இரண்டு எலும்பு கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த எலும்பு கூடுகளுடன் பெண்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் சிலவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மேலாடைகள் சிலவும் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கி தோட்டாக்கள் என சந்தேகிக்கப்படும் உலோக பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...