மல்வானை அல்-முபாரக் கல்லூரியின் நூற்றாண்டு விழா: பிரதம அதிதியாக ஜனாதிபதி

Date:

நாளை மறுதினம் புதன்கிழமை நடைபெறவுள்ள மல்வானை அல்-முபாரக் தேசியக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொளவார்.

இந்நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவும் விசேட அதிதியாக ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜயவர்த்தனவும் வருகைத் தரவுள்ளனர்

அன்றைய தினம் நூற்றாண்டு நினைவு மலர் வெளியீட்டு வைக்க இருப்பதுடன் ஆசிரியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும் வைபவமும் இடம்பெறவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள் பழைய மாணவர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

1922 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரியை அமைப்பதற்கான காணியை சமூக சேவையாளரும் அக்காலத்தில் பிரபல வர்த்தகருமான மர்ஹூம் அஹமத் லெவ்வை முஹம்மத் சாலிஹ் ஹாஜியார் அவர்களால் வழங்கப்பட்டதாக ஊடகப் பணிப்பாளர் ஹில்மி முஹம்மத் ‘நியூஸ்நவ்’க்கு தெரிவித்தார்.

மேலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதன் முதலில் பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு மல்வானை மக்கள் பாரிய பங்களிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...