மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வேண்டும்: முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை

Date:

தேசிய பட்டியல் மூலம் தான் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கட்சியின் தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனடிப்படையில், தேசிய பட்டியலில் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்கவை பதவி விலக செய்து, அந்த பதவியை தனக்கு வழங்குமாறு அவர், கட்சியின் தலைவரான சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும் தனது தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை முஜிபுர் ரஹ்மானுக்கு வழங்குவது குறித்து மயந்த திஸாநாயக்க இதுவரை விருப்பத்தை வெளியிடவில்லை ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆங்கில ஊடகமொன்றுன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

மயந்த திஸாநாயக்க, தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை முஜிபுர் ரஹ்மானுக்கு வழங்க தயங்கி வருகிறார்.

மயந்த திஸாநாயக்க தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படும் போது இரண்டு ஆண்டு காலத்திற்கு மாத்திரமே நியமிக்கப்படுவதாக கூறியே நியமிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

கண்டியில் கோலாகலமாக நடைபெற்ற ‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’ வரலாற்று நூலின் அறிமுக விழா!

இலங்கையின் பெருமைமிக்க வரலாற்றில் முஸ்லிம்களின் பங்களிப்பை எடுத்துரைக்கும் 'அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய...

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...