முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஒளியேற்றப்படவுள்ள கொழும்பு தாமரை கோபுரம்

Date:

இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் மூன்றாவது மாதமான ரபியால்-அவ்வல் மாதத்தில் இன்றைய நாளில் சவூதி அரேபியாவின் மக்கா நகரில் நபிகள் நாயகம் பிறந்ததாக இஸ்லாம் கூறுகிறது.

அனைத்து மனிதகுலத்திற்கும் அன்பு மற்றும் அமைதியின் செய்தியைப் பரப்பிய இஸ்லாத்தின் சிறந்த ஆசிரியரான முஹம்மது நபி, அல்லாஹ்வின் கடைசி தூதர் என்று அறியப்படுகிறார்.

நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை இஸ்லாமியர்கள் சிறப்பான நாளாகக் கருதுகிறார்கள்.

மரியாதைக்குரிய மனித நேயத்தைக் கட்டியெழுப்பத் தன்னை அர்ப்பணித்த நபி அவர்களின் பிறந்தநாளை இன்று உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதேவேளை, நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பு தாமரை கோபுரம் பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் இன்று ஒளியேற்றப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி...

Diamond Excellence Award: அட்டாளைச்சேனை Hakeem Art Work க்கு “கலை. சமூக தாக்கம்” விருது

அட்டாளைச்சேனை-13 இல் செயல்பட்டு வரும் Hakeem Art Work Shop நிறுவனம்,...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத்  தொடர்ந்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேசிய லொத்தர்...

தேசிய இணையவழிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிலையம் ஆரம்பம்!

இணையவழித் தாக்குதல்கள் காரணமாக அரசாங்க நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் எதிர்கொள்ளும்...