36 பகிடிவதை சம்பவங்கள் பதிவு : 57 மாணவர்கள் இடைநிறுத்தம்!

Date:

நாட்டில் கடந்த 12 மாதங்களில் 36 பகிடிவதை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள 17 பல்கலைக்கழகங்களில் குறித்த எணிக்கையிலான பகிடிவதை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக 57 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில் தொடர்ந்து பகிடிவதை சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

இதன்படி, பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் 11 பேர் அண்மையில் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

புதிய மாணவர்களை பகிடிவத்தைக்குட்படுத்திய குற்றச்சாட்டில் இவ்வாறு இடைநிறுத்தபட்டனர்.

இந்த நிலையில், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிலையங்களில் மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக பொலிஸாரினால் அண்மையில் விசேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன்படி, 076 545 3454 எனும் வாட்ஸ்அப் இலக்கத்தின் மூலம் கல்வி நிலையங்களில் மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல்கள் குறித்து அறிவிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...