50 ஓட்டங்களுக்கு இலங்கை அணி ஆட்டமிழந்தது: இந்தியா நிதானமான துடுப்பாட்டம்

Date:

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை அணி 50 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

இதன்படி, இந்திய அணிக்கு 51 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

ஆரம்பம் முதலே பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டிருந்த இலங்கை அணி 50 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கை அணி சார்பில் குசல் மென்டிஸ் அதிகபட்சமாக 17 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இலங்கை அணியின் ஐந்து வீரர்கள் ஓட்டங்களை எதுவும் பெறாமல் ஆட்டமிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி சார்பில் மொஹமட் சிராஜ் ஆறு விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணி நிதானமாக துடுப்பெடுத்தாடி வருகின்றது.

51 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி சற்று முன்னர் வரை விக்கெட் இழப்பின்றி 31 ஓட்டங்களை பெற்றுள்ளது.

2.4 ஓவர்கள் வீசப்பட்டுள்ள நிலையில், இன்னும் வெற்றிபெற இந்திய அணிக்கு 20 ஓட்டங்களே தேவைப்படுகின்றது.

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...