A/L எழுதிய மாணவர்களுக்கு பேரா.முஸ்லிம் மஜ்லிஸ் நடத்தும் உயர்கல்வியைத் தொடர்வதற்கான வழிகாட்டல் நிகழ்வு!

Date:

உயர்தரக் கல்வியை முடித்து மேற்படிப்பு மேற்கொள்ளவுள்ள மாணவர்களுக்கு பல்கலைக்கழக வாய்ப்புகள் மற்றும் எதிர்காலக் கற்கைத் துறைகள் தொடர்பிலான வழிகாட்டல் நிகழ்ச்சியொன்றை பேராதனை பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஊக்குவிப்பு அமர்வுகள், அனைத்துத் துறைகளுக்குமான பாடத் தேர்வு வழிகாட்டல்கள், பொதுவான கற்கை நெறி வழிகாட்டல்கள், ஒன்லைன் பதிவுக்கான வழிகாட்டல்களுடன் கலந்துரையாடல் அமர்வுகளும் இடம்பெறவுள்ளன.

‘வெற்றியை நோக்கி’ எனும் மகுடத்திலான இந்த நிகழ்ச்சி 16 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் பி.ப.3.00 மணி வரை பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் ஈஓஈ பெரேரா அரங்கில் நடைபெறும்.

மேலதிக தகவல்களை 0778789782 என்ற இலக்கத்தில் பெற்றுக் கொள்ளலாம்

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...