Asia Cup 2023: இன்று இறுதிப்போட்டி வெற்றிவாகை சூடப்போகும் அணி எது?

Date:

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பிற்பகல் 3 மணியளவில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

16 ஆவது ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடர் கடந்த ஒகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமானதுடன், தொடரின் போட்டிகள் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் இடம்பெற்றன அதன்படி இன்று இலங்கை மற்றும் இந்திய அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்த இரு அணிகளும் 8ஆவது தடவையாக மோதவுள்ளன. இதுவரையில் ஆசிய கிண்ணத்தை இந்தியா 7 முறையும், இலங்கை 6 முறையும் வென்றுள்ளன.

இதேவேளை, இன்றைய போட்டியிலிருந்து இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஸ் தீக்ஷன உபாதை காரணமாக விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக சஹான் ஆரச்சிகே அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அத்துடன், உபாதை காரணமாக இந்திய அணியின் அக்ஷர் பட்டேல் விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் இன்று விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய போட்டிக்கான அனுமதிச் சீட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்ததால், குறித்த அனுமதிச் சீட்டு விற்பனைக்காக வித்யா மாவத்தை மற்றும் ஆர். பிரேமதாச மைதானத்திற்கு அருகில் திறக்கப்பட்ட விற்பனை கூடங்கள் மூடப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...