அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

Date:

சதொச நிறுவனம் ஆறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மீண்டும் குறைத்துள்ளது.

அனைத்து சதொச நிறுவனங்களிலும் இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிவப்பு பருப்பு, பெரிய வெங்காயம், வெள்ளைப்பூண்டு, நெத்தலி, கிழங்கு மற்றும் சோயாமீட் ஆகியவற்றின் விலைகள் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, சிவப்பு பருப்பு கிலோ ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டு 299 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பெரிய வெங்காயம் கிலோ ஒன்றின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு 195 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

வெள்ளைப்பூண்டு கிலோ ஒன்றின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டு 620 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், நெத்தலியின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டு 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும், கிழங்கின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், சோயாமீட்டின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் தெரிவித்த்துள்ளது.

Popular

More like this
Related

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கைது!

காணி தகராறு ஒன்றில் பெண்களை துப்பாக்கியை கட்டி மிரட்டியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்...

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு.

வடக்கு ஜப்பானில் திங்கட்கிழமை அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. ஜப்பானில் கடந்த ஒரு வாரத்திற்கு...

விமான நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதல்: கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகளுக்கு மே 2 வரை விளக்கமறியல்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது...

காவி உடையை தவறாக பயன்படுத்தியமைக்கு மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு!

புனிதமான காவி உடையைத் தவறாகப் பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட போலியான...