அன்றாட வாழ்வில் நபி அவர்களின் மகத்துவம் அனைவரையும் வழிநடத்தும்: முஸ்லிம் சமய திணைக்கள பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி

Date:

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளான இந்த மீலாதுன் நபி தினமானது உலகினை நேர்வழிப்படுத்த உதவிய நபிகளாரின் போதனைகளை நினைவுகூரும் ஒரு உன்னத தருணமாகும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளரின் இஸட் .ஏ.எம். பைசல் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனைகள் ஒவ்வொரு மனிதனுக்கும் சம உரிமை மற்றும் சமத்துவத்தினை வலியுறுத்தும் உன்னதமான கருத்தை அடிப்படையாகக் கொண்டவை.

எந்தவொரு நபரும் இனம், சாதி அல்லது நிறம் காரணமாக ஒருவரை விட உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ அல்லர்.

வெறுப்பு மற்றும் மோதல்கள் நிறைந்த யுகத்தில் மனித விழுமியங்களுக்கும் மனிதநேயத்திற்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பங்களிப்பு உண்மையில் நம் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்களைச் சுரண்டுவதை எதிர்த்ததுடன், அடிமைகளின் சுதந்திரத்திற்காகவும் பாடுபட்டார்கள்.

தொழிலாளர்களின் வியர்வை உலர்வதற்குள் ஊதியம் வழங்க வேண்டும் என்று போதித்தது இதற்கு உதாரணம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளான இத்தினத்தில், உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அன்பின் செய்தியை கொண்டு செல்லும் மிலாதுன் நபியின் மகத்துவம் அன்றாட வாழ்வில் நம் அனைவரையும் வழிநடத்தும் என்று நம்புகிறேன்.

இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...