ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் உடனடி விசாரணை நடத்துமாறு ஐநா மனித உரிமை ஆணையாளர் அரசுக்கு அழுத்தம்

Date:

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச ஆதரவுடனும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின் பூரண பங்கேற்புடனும் சுயாதீனமானதும் வெளிப்படையானதுமான விசாரணையை ஆரம்பிக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மீண்டும் இலங்கை அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது அமர்வின் ஆரம்ப அமர்வில் நேற்று (11) உரையாற்றிய போதே பிரதி உயர்ஸ்தானிகர் நடா அல் நஷிப் இதனைத் தெரிவித்தார்.

மனித உரிமை மீறல்கள் மட்டுமன்றி ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகள் தொடர்பிலும் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களின்படி விசாரணைகளையும் வழக்குகளையும் விரைந்து மேற்கொள்ளுமாறு இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்த உயர்ஸ்தானிகரின் அறிக்கை அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளதாக அவர் கூறினார்.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...