ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு ஏற்கனவே அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது; மீண்டுமொரு விசாரணை வேண்டாம்

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் மீண்டுமொரு விசாரணை அவசியம் இல்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்று ஏற்கனவே முறையான விசாரணைகளை நடத்தியுள்ளன.

அதனால், மீண்டும் அதுதொடர்பில் விசாரணைகளை நடத்த வேண்டிய அவசியமில்லை என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.

தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னர் இன்டர்போல், அவுஸ்ரேலியாவின் பெடரல் பொலிஸார், அமெரிக்காவின் எப்.பி.ஐ ஆகிய பொலிஸார் முறையான விசாரணைகளை நடத்தி அவை தொடர்பிலான தகவல்களை ஏற்கனவே, சட்டமா அதிபரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அவர்கள் வழங்கிய விசாரணை அறிக்கைகளின் பிரகாரம் பெரும்பாலானவர்களுக்கு எதிராக வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

2022ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பில் மீண்டும் விசாரணையொன்றை நடத்துமாறு அமெரிக்காவின் எப்.பி.ஐ பொலிஸ் திணைக்களத்துக்கு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்த போது, இந்த தாக்குதல்கள் குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு ஏற்கனவே அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால் மீண்டுமொரு விசாரணை அவசியமில்லையென அவர்கள் வலியுறுத்தியதாகவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு செனல் 4 தொலைக்காட்சி உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பில் வெளியிட்டிருந்த ஆவணப்படத்தால் இலங்கையில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன.

 

 

Popular

More like this
Related

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...

சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.

'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே...

இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் விஜித ஹேரத்!

‘ரைசினா கலந்துரையாடல் 2026’ (Raisina Dialogue 2026) மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா...

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...