உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனுக்களை இரத்து செய்வதால் ரூ.1 பில்லியன் இழப்பு!

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான அண்மைய தீர்மானமானது ஒரு பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதி இழப்புக்கு வழிவகுக்கும் என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை (PAFFREL) தெரிவித்துள்ளது.

குறிப்பாக நாட்டின் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் அரசாங்கத்தின் இந்த முடிவு குறித்து பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கவலை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான தீர்மானத்தினால் ஏற்பட்ட நிதி இழப்புக்கு யார் பொறுப்புக் கூறுவது என ஹெட்டியாராச்சி கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார் .

மேலும், 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தயாரிப்பில் இலங்கை தேர்தல் ஆணையம் ஏற்கனவே கணிசமான தொகையை முதலீடு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் வேட்புமனுக்கள் ரத்து செய்யப்படுவதால், வருவாய் இழப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல், தேர்தலுக்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ஆதாரங்களும் வீணடிக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளார் .

வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கான தீர்மானம் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவில் செப்டம்பர் 20 ஆம் திகதி ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...