சிங்கப்பூரின் ஜனாதிபதியானார் தர்மன் சண்முகரத்தினம்!

Date:

சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பூர்விகத் தமிழரான தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றார்.

சிங்கப்பூரின் 8-ஆவது ஜனாதிபதியும், முதல் பெண் ஜனாதிபதியுமான ஹலீமா யாகூபின் பதவிக் காலம் நிறைவடைவதைத் தொடர்ந்து, அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் போட்டியிட்டார். 66 வயதாகும் அவருடன், இங்கோக் சாங் (75) மற்றும் டான் கின் லியான் (75) ஆகிய சீனாவைப் பூர்விகமாகக் கொண்ட இருவரும் தேர்தலில் போட்டியிட்டனர்.

வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின. தேர்தல் துறை வெளியிட்டுள்ள இறுதி முடிவுகளின்படி, மொத்தம் பதிவான 24.8 இலட்சம் வாக்குகளில் தர்மன் சண்முகரத்னம் 17.46 இலட்சம் (70.4 சதவீதம்) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இங்கோக் சாங்குக்கு 15.7 சதவீத வாக்குகளும், டொன் கின் லியானுக்கு 13.88 சதவீத வாக்குகளும் கிடைத்தன.

அதையடுத்து, சிங்கப்பூரின் 9-ஆவது ஜனாதிபதியாக தர்மன் சண்முகரத்னம் பொறுப்பேற்கிறார்.

Popular

More like this
Related

தேசிய பூங்காக்களை பார்வையிட Online ஊடாக நுழைவுச்சீட்டு

தேசிய பூங்காக்களை பார்வையிடுவதற்காக நேற்று (10) முதல் Online ஊடாக நுழைவுச்சீட்டுகளை...

ஸஹீஹுல் புகாரி ‘கிரந்தத்திற்கு எதிரான நவீன குற்றச்சாட்டுக்களும் பதில்களும்’ நூல் வெளியீட்டு நிகழ்வு!

ஸஹீஹுல் புகாரி 'கிரந்தத்திற்கு எதிரான நவீன குற்றச்சாட்டுக்களும் பதில்களும்'  நூல் வெளியீட்டு...

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 5 அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்

காசா நகரின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேலிய தாக்குதலில் ஐந்து அல்...

நாட்டின் பல பகுதிகளில் சிறிதளவு மழைக்கான சாத்தியம்!

நாட்டில் இன்று (11) மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா,...