ஜனாதிபதி நாடு திரும்பியதும் இரண்டாம் தவணைக்கான பணியாளர் மட்ட உடன்படிக்கை கைச்சாத்திடப்படும்!

Date:

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நிதி நிவாரண தொகுதியின் இரண்டாம் தவணைக்கான ஊழியர் மட்ட உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளது.

இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதைத் தொடர்ந்து அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஊழியர் மட்ட உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78 ஆவது அமர்வில் பங்கேற்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது அமெரிக்கா பயணமாகியுள்ளார்.

கியூபாவில் நடைபெற்ற ஜி77 மற்றும் சீனா உச்சிமாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் ஜனாதிபதி அமெரிக்கா சென்றுள்ளார்.

இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 21ஆம் திகதி அமர்வில் தமது விசேட உரையை ஆற்றவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் முதல் மீளாய்வு குறித்த சர்வதேச நாணய நிதிய குழுவுடனான கலந்துரையாடல் கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமானது.

இதனிடையே, சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நிதி நிவாரண தொகுதியின் இரண்டாம் தவணை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்பட்ட போதும், குறித்த நிதி இந்த மாதம் கிடைக்கப்பெறாது என வெரிட்டி ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...