பல்துறை கலைஞர் எஸ்.எஸ்.எம்.ரபீக் மாஸ்டர் கௌரவிக்கப்பட்டார்!

Date:

கலை இலக்கிய துறையில் பல்வேறு விருதுகளை வென்றெடுத்துள்ள புத்தளம் கலைஞர், ஓய்வுபெற்ற ஆசிரியர், கலாவர்ணன் “எஸ்.எஸ்.எம். ரபீக் மாஸ்டர்” தனது ஐந்து புதிய படைப்புகளுக்கு முதலிடங்களை பெற்று சாதித்துள்ளார்.

புத்தளம் பிரதேச இலக்கிய விழாவுக்காக இவர் சமர்ப்பித்த கலை ஆக்கங்களில் பாடலாக்கம்- செய்யுள், முகப்புப் பாடலாக்கம், கவிதையாக்கம், சிறுகதை எழுதுதல், சிறுவர் கதை ஆக்கம் ஆகியவற்றிலேயே இவர் முதலிடங்களை பெற்றுள்ளார்.

இதற்கான பரிசளிப்பு விழா அண்மையில் (27) புத்தளம் பிரதேச செயலக “சுபாஷி” கேட்போர் அரங்கில் நடைபெற்றது.

புத்தளம் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
புத்தளம் மாவட்ட மேலதிக செயலாளர், கலாசார பிரிவு அதிகாரிகள், மத குருக்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

புத்தளம் பிரதேச காரியாலய கலாசாரப் பிரிவு அலுவலகர் தம்மிகா அவர்கள் நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பாக நின்று கடமையாற்றினார்.

(எம்.யூ.எம்.சனூன்)

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...