மணல் அகழ்வுக்கு எதிராக திருமலையில் பாரிய ஆர்ப்பாட்டம்!

Date:

திருகோணமலை, குச்சவெளி பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த ஆர்ப்பாட்டம் நேற்று காலை முதல் நடாத்தப்பட்டு வருகிறது.

குச்சவெளி பகுதியில் GSMB மற்றும் MIDWEST நிறுவனத்தின் ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரி ஆயிர கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் பிரதேச மக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

மணல் அகழ்வு காரணமாக இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவதாகவும், தமது எதிர்கால சந்ததிக்கு இயற்கை வளங்கள் இல்லாமல் போவதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை உரிய தரப்பினர் முன்னெடுக்க வேண்டும் என குச்சவெளி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Popular

More like this
Related

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...