மணல் அகழ்வுக்கு எதிராக திருமலையில் பாரிய ஆர்ப்பாட்டம்!

Date:

திருகோணமலை, குச்சவெளி பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த ஆர்ப்பாட்டம் நேற்று காலை முதல் நடாத்தப்பட்டு வருகிறது.

குச்சவெளி பகுதியில் GSMB மற்றும் MIDWEST நிறுவனத்தின் ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரி ஆயிர கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் பிரதேச மக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

மணல் அகழ்வு காரணமாக இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவதாகவும், தமது எதிர்கால சந்ததிக்கு இயற்கை வளங்கள் இல்லாமல் போவதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை உரிய தரப்பினர் முன்னெடுக்க வேண்டும் என குச்சவெளி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...