வைத்தியர் ஒருவரை உருவாக்க மக்கள் வரிப்பணத்திலிருந்து 4 மில். ரூபா ஒதுக்கப்படுகிறது’

Date:

இந்நாட்டில் வரி செலுத்தும் மக்களின் பணத்தில் வைத்தியர் ஒருவரை உருவாக்குவதற்கு சுமார் நான்கு மில்லியன் ரூபா ஒதுக்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

” மருத்துவ மாணவர் ஒருவர் பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு கல்வியை நிறைவு செய்வதற்கு மக்களின் பணத்தில் இருந்து 40 இலட்சத்து 92,915 ரூபாய் செலவிடப்படுகிறது.

இது மாதாந்த அடிப்படையில் 68,215 ரூபாவாகும். வரி செலுத்துவோர் பொறியியல் மாணவர் ஒருவருக்கு 2.1 மில்லியன் ரூபாவும், முகாமைத்துவ மாணவருக்கு 1 மில்லியன் ரூபாவும், கலைத்துறை மாணவர் ஒருவருக்கு 1.3 மில்லியன் ரூபாவும் வரி செலுத்தும் மக்களின் பணத்திலிருந்து ஒதுக்கப்படுகிறது. ” என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...