இஸ்ரேலில் காயமடைந்த இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்!

Date:

இஸ்ரேல் படையினருக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின்போது காயமடைந்த இலங்கை பிரஜை, சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் பிரவேசித்தவர் என கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் அவருக்கு அந்த நாட்டிலிருந்து எந்தவித நட்டஈடும் வழங்கப்பட மாட்டாது என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் சுற்றுலா விசாவில் ஜோர்தானுக்குச் சென்றதாகவும், அதன் பின்னர் சட்டவிரோதமாக இஸ்ரேலுக்கு சென்று பணிபுரிந்து வந்துள்ளதாகவும் தூதுவர் நிமல் பண்டார ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜோர்தான் எல்லை வழியாக சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் பிரவேசித்த இரண்டு இலங்கைப் பெண்கள் இஸ்ரேல் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார நேற்று தெரிவித்தார்.

எனவே யுத்த சூழ்நிலையில் சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் வருவதை தவிர்க்குமாறு இலங்கை தூதுவர் நிமல் பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...