கரம்பை இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வுகள்!

Date:

சிறுவர் தினத்தை முன்னிட்டு கரம்பை இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் “எல்லாவற்றையும் விட சிறுவர்கள் பெறுமதியானவர்கள்” எனும் மகுட வாசகத்தின் கீழ் சிறுவர் தின நிகழ்வுகள் நேற்று (2) கரம்பை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நாயக்கர்செனை பாலர் பாடசாலையில் இடம்பெற்றது.

பிரார்த்தனையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கரம்பை கிராம அலுவலர் NM.NAWFAL அவர்களும், விஷேட அதிதியாக நாயக்கர்செனை பாடசாலையின் அதிபர் V. Ramanathan அவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் கரம்பை சிவில் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் V.Rasalingam அவர்கள், கரம்பை இளைஞர் கழக உறுப்பினர்கள், பாலர் பாடசாலையின் ஆசிரியர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இச் சிறுவர் தின நிகழ்வின் போது பாலர் பாடசாலை மாணவர்களுக்கான பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் உட்பட பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டதோடு இறுதியில் மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.

கரம்பை இளைஞர் கழகம்,

Popular

More like this
Related

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...

சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.

'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே...