தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் புதிய தலைவராக ஆனந்த விஜேவிக்ரம!

Date:

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (NMRA) புதிய தலைவராக விசேட வைத்திய நிபுணர் கலாநிதி ஆனந்த விஜேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரவினால் இன்று இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பணிப்பாளர் சபையுடன் அமைச்சர் நடத்திய விசேட கலந்துரையாடலின் பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

1992 ஆம் ஆண்டு அரச சேவையில் இணைந்துகொண்ட விசேட வைத்திய நிபுணர் கலாநிதி ஆனந்த விஜேவிக்ரம தற்போது தேசிய தொற்றுநோய் நிறுவனத்தின் சிரேஷ்ட உடலியல் நிபுணராக கடமையாற்றி வருகின்றார்.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...