‘புதியவர்கள் தான் அரசியலுக்கு வரவேண்டும்’: ஆன்மீக பயணங்களை ஆரம்பித்த மஹிந்த

Date:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அளுத்கமயில் உள்ள மலை விகாரையொன்றுக்கு சென்று ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டுள்ளார்.

நேற்றைய தினம் மாத்திரம் நான்கு விகாரைகளில் முன்னாள் ஜனாதிபதி வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

“புதியவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அவர்கள் முன்வந்தால் நாம் முழுயைான ஆதரவை வழங்குவோம். பொதுஜன பெரமுனவுக்கு இளம் தலைவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.    நாமே தொடர்ந்து தலைமைத்துவத்தில் இருக்க முடியாது. புதியவர்கள் முன்வர வேண்டும்“ என்றார்.

கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி சமய நடவடிக்கைகளில் அடிக்கடி ஈடுபட்டு வந்தார்.

குறிப்பாக விகாரைகள், கோயில்கள் உட்பட பல்வேறு மத ஸ்தலங்களில் மஹிந்த ராஜபக்ஷ ஆசிர்வாதங்களை பெற்றுக்கொள்வார்.

சிறிதுகாலம் அவர் வழிபாடுகளில் ஈடுபடுவதில் இருந்து விலகியிருந்த நிலையில், மீண்டும் அவர் தமது ஆன்மீக பயணங்களை ஆரம்பித்துள்ளார்.

Popular

More like this
Related

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, முடிந்தவரை...

நெதன்யாகு எங்கே? இஸ்ரேல் பிரதமர் குறித்து பரவும் மர்மம்: ஈரான் ஊடகம் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்ற யூகங்கள்...

பல்துறை அறிஞர் பேராசிரியர் நகீப் அத்தாஸ் மறைந்தார்.!

பொதுவாக அறிவுலகத்திற்கும், உலக முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் அறிவுப் பங்களிப்பை வழங்கிய...

வாகன இலக்கத் தகடு : புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான...