வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் திட்டத்தை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற வழிவகைகள் குழு பரிந்துரை!

Date:

கொழும்பு மாநகரில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதனை தடுப்பதற்கு எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்த திட்டத்தினை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மாநகர சபைக்கு பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு பரிந்துரைத்துள்ளது.

வழிவகைகள் பற்றிய குழு பாராளுமன்றத்தில் கூடிய நிலையில், இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாநகரசபை மற்றும் நில மேம்பாட்டுக் கழகம் இடையில் உரிய ஒருங்கிணைப்பு இல்லாததன் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாக  தெரியவந்துள்ளது.

அத்துடன், கடந்த காலங்களில் கொழும்பு மாநகரசபையின் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் பெருக்கெடுக்கும் நீரைத் தடுப்பதற்கு போதுமான முகாமைத்துவமின்மை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், சமனல வாவி நீர்த்தேக்கத்தில் 30 வருடகாலமாக காணப்படும் நீர் கசிவு தொடர்பிலும் குழுவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அறிவுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...