ஸ்ரீலங்கன் விமான சேவை தொடர்பில் அமைச்சர் நிமல் விடுத்துள்ள அறிவிப்பு

Date:

சரியான நேரத்தில் புறப்பட முடியவில்லை என்பதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானங்களை புறக்கணிக்க வேண்டாம் என கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் பல விமானங்கள் தாமதமாக புறப்படுவதால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கன் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்படுவதால், பயணிகளை மாற்று விமானங்களை பயன்படுத்துமாறு கூற வேண்டிய நிலை ஏற்படும். விமான தாமதம் குறித்து அதிகாரிகளும் முரண்பட்ட கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

எவ்வாறாயினும், சில அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான விமானங்கள் தாமதமாகவே புறப்படுகின்றன. இதற்கான உரிய காரணத்தை விமான நிறுவனம் வெளியிடவில்லை.

என்றாலும், உரிய நேரத்துக்கு செல்ல முடியாது பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...