அனுலா ரத்நாயக்க துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார் – வெளியானது பரிசோதனை அறிக்கை!

Date:

இஸ்ரேலில் உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவின் உடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது அவர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

அவரது உடலிலிருந்து துப்பாக்கி ரவைகளின் துண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு குறித்த பெண் தாக்குதல் அல்லது சித்திரவதைக்கு உள்ளாக்கப்படவில்லையென பிரேத பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்ரேலில் வீட்டுப்பணிப்பெண்ணாக பணியாற்றிய போது கடந்த 7 ஆம் திகதி ஹமாஸ் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அனுலா ரத்நாயக்க உயிரிழந்தார்.

இந்திநிலையில், அவரது இறுதிக் கிரியைகள் களனி – வெவெல்துவ பொது மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...